செய்திகள்

தொடர்ச்சியாக இரு சதங்கள்: தரவரிசையில் கோலி முன்னேற்றம்!

DIN

ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக இரு சதங்கள் அடித்த பிரபல பேட்டர் விராட் கோலி, ஒருநாள் தரவரிசையில் முன்னேற்றம் அடைந்துள்ளார்.

குவாஹாட்டியில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் 113 ரன்கள் எடுத்த விராட் கோலி, ஆட்ட நாயகனாகத் தேர்வானார். வருடக் கடைசியில் வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் சதமடித்தார். இதற்கடுத்து விளையாடிய ஒருநாள் ஆட்டத்திலும் இலங்கைக்கு எதிராகச் சதமடித்தார். 

இந்நிலையில் ஐசிசி வெளியிட்டுள்ள ஒருநாள் தரவரிசையில் இரு இடங்கள் முன்னேறி 6-ம் இடத்தைப் பிடித்துள்ளார் கோலி. ரோஹித் சர்மா 8-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். 

ஒருநாள் தரவரிசையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம் முதல் இடத்தைத் தக்கவைத்துக்கொண்டுள்ளார். அடுத்த 4 இடங்களில் வான் டர் டுசென், இமாம் உல் ஹக், குயிண்டன் டி காக், வார்னர் ஆகியோர் உள்ளார்கள். இந்தியாவின் ஷ்ரேயஸ் ஐயர் 15-வது இடத்தில் உள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

SCROLL FOR NEXT