செய்திகள்

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: முதல் இன்னிங்ஸில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இந்திய அணி!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

DIN

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகின்றன. ஆட்டத்தின் இரண்டாம் நாளான இன்று ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 469 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 163 ரன்களும், ஸ்டீவன் ஸ்மித் 121 ரன்களும் எடுத்தனர். 

இதனையடுத்து, இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் களமிறங்கினர். இந்திய அணிக்கு தொடக்கம் ஏமாற்றமாகவே அமைந்தது. ரோஹித் சர்மா 15 ரன்களிலும், ஷுப்மன் கில் 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய புஜாரா மற்றும் விராட் கோலியும் பெரிதாக சோபிக்கவில்லை. புஜாரா மற்றும் கோலி இருவரும் 14 ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால், இந்திய அணி 71 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

ஆஸ்திரேலிய தரப்பில் மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ், ஸ்காட் போலண்ட் மற்றும் கேமரூன் கிரீன் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

இந்திய அணி வீரர்கள் அஜிங்கியா ரஹானே மற்றும் ரவீந்திர ஜடேஜா களத்தில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்திய அணி ஆஸ்திரேலியாவைக் காட்டிலும் 350-க்கும் அதிகமான ரன்கள் பின் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“தமிழக உரிமைகளை அடகு வைக்காத தலைவர் மு.க.ஸ்டாலின்!” திமுகவில் இணைந்த மனோஜ் தங்கராஜ் பேட்டி!

ரிலாக்ஸ்... ரேஷ்மா பசுபுலேட்டி!

விஜே பார்வதிக்கு சரியான போட்டியாளர் திவ்யா கணேசன்! ரசிகர்கள் கருத்து

தெலங்கானா அமைச்சரவையில் அசாருதீனுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு!

கோவிலுமல்ல, சிற்பமுமல்ல... ஆனியா!

SCROLL FOR NEXT