என் பெயரில் போலியான விளம்பரம்: வழக்கு தொடுத்த சச்சின்!
சச்சின் டெண்டுல்கர் பெயரில் போலியான விளம்பரம் செய்யப்பட்டுள்ளதால் மும்பை காவல் துறையிடம் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் முகம், பெயர், குரலை போலியாக பயன்படுத்தி விளம்பரம் செய்யப்பட்டுள்ளதாக மும்பை காவல்துறையிடம் சச்சின் சார்பாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இது குறித்து மும்பை சைபர் காவல் துறையினர் அடையாளம் தெரியாத நபர் மீது ஐபிசி 426, 465, 500 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: உலகத்திலேயே சிலரால் மட்டும்தான் இந்த ஷாட்டை விளையாட முடியும்: சூர்யகுமாருக்கு சச்சின் புகழாரம்!
அதிகாரபூர்வமற்ற பொருள்களை மக்களிடம் விற்க எனது பெயரினை பயன்படுத்துவது கண்டிக்கதக்கதென சச்சின் தெரிவித்துள்ளார். சச்சினின் எஸ்ஆர்டிஎஸ்ஆம் நிறுவனம் இது தொடர்பாக கூறியதாவது:
சச்சினின் அனுமதியின்றி அவரது பெயரினையிம் குரலினையும் தவறாக பயன்படுத்தியுள்ளார்கள். இது மக்களை தவறாக வழிநடத்திவிடும் அபாயமிருக்கிறது. சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள போலியான விளம்பரம் குறித்து சைபர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளோம். விசாரணை மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.