முகப்பு
செய்திகள்

இறுதிப் போட்டியில் வான வேடிக்கை! 

உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடைபெறும் மைதானத்தில் இந்திய விமான படையினர் நடத்திய வான வேடிக்கை பார்வையாளர்களை கவர்ந்தது. 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:22 AM
பகிர்:

கடந்த மாதம் 5-ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்ற உலகக் கோப்பை போட்டி, தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. 

அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வரும் இறுதிப் போட்டிக்கு இந்திய விமான படையினர் சார்பாக சூர்ய கிரண் குழுவினர் விமானங்களை வைத்து சாகச நிகழ்ச்சியை நடத்தினர். 

இது பார்வையாளர்களை மிகவும் கவர்ந்துள்ளது. இணையத்திலும் இந்த விடியோக்கள் வைரலாகி வருகிறது. 

டாஸ் வென்ற ஆஸி. அணி பௌலிங் செய்கிறது. இந்திய அணி 9 ஓவர் முடிவில் 66/1 ரன்கள் எடுத்துள்ளது. ஷுப்மன் கில் 4 ரன்களில் ஆட்டமிழந்தார்.      

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.