முகப்பு
செய்திகள்

சாதனை நாயகன் குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு!

கனடாவில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் வென்ற தமிழக வீரர் குகேஷ் சென்னை வந்தடைந்தார்.

Updated On : 25 ஏப்ரல் 2024, 1:13 pm IST
சாதனை நாயகன் குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு. - PTI
பகிர்:

கனடாவில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் இந்தியரும், தமிழகத்தைச் சோ்ந்தவருமான குகேஷ் சாம்பியன் ஆனாா்.

இதன்மூலம் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்ற அவா், அந்த சாம்பியன்ஷிப்புக்கு தகுதி பெற்ற இளம் போட்டியாளா் (17 வயது) என்ற புதிய சாதனை படைத்தாா். இதற்கு முன்னா், ரஷிய நட்சத்திரமான கேரி கேஸ்பரோவ் 1984-இல் தனது 22-ஆவது வயதில் உலக சாம்பியன்ஷிப்புக்கு தகுதி பெற்றதே குறைந்தபட்ச வயதாக இருந்தது. குகேஷ் 40 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த சாதனையை முறியடித்திருக்கிறாா்.

நடப்பாண்டின் கடைசியில் நடைபெறவிருக்கும் உலக செஸ் சாம்பியன்ஷிப்பில், நடப்பு சாம்பியனாக இருக்கும் சீனாவின் டிங் லிரெனுடன் மோதவுள்ளாா் குகேஷ்.

Advertisement

Advertisement

இந்நிலையில் குகேஷ் சென்னை வந்தடைந்தார். குகேஷ் படித்த வேலம்மாள் வித்யாலயா பள்ளியில் இருந்து 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் நேரில் வந்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.

அதிகாலை 3 மணிக்கு வந்தடைந்த குகேஷுக்கு சென்னை மக்களிடம் அமோக வரவேற்பு கிடைத்தது.

- R Senthilkumar

“நான் சொந்த மண்ணுக்கு வந்தடைந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இது சிறப்பான சாதனை. தொடரின் தொடக்கத்தில் இருந்து நான் மிகவும் நம்பிக்கையுடன் இருந்தேன்; அதிர்ஷ்டமும் எனக்கு சாதகமாக இருந்தது. தற்போது பலரும் செஸ் போட்டியினை கொண்டாடுவதைப் பார்க்க நெகிழ்ச்சியாக இருக்கிறது.

தமிழக அரசு, எனது அப்பா, அம்மா, பயிற்சியாளர், நண்பர்கள், எனது பள்ளி என எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி” எனக் கூறினார்.

குகேஷ் குடும்பத்தினர் அவரைக் கட்டியணைத்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.

- R Senthilkumar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments