பிஸ்மா மரூஃப்
பிஸ்மா மரூஃப்  படம் | ஐசிசி
செய்திகள்

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

DIN

பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீராங்கனைகளில் ஒருவரான பிஸ்மா மரூஃப் அனைத்து வடிவிலான சர்வதேசப் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்து கிரிக்கெட் உலகை அதிர்ச்சியடையச் செய்துள்ளார்.

கடந்த 2006 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்காக அறிமுகமான பிஸ்மா மரூஃப் இதுவரை 276 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 6,262 ரன்கள் குவித்துள்ளார். அதில் 33 அரைசதங்கள் அடங்கும். பாகிஸ்தான் அணிக்காக அவர் 80 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

பாகிஸ்தான் அணிக்காக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனையாக அவர் வலம் வருகிறார். அவர் ஒருநாள் போட்டிகளில் 3,369 ரன்களும், டி20 போட்டிகளில் 2,983 ரன்களும் குவித்துள்ளார். பாகிஸ்தான் அணிக்காக ஒருநாள் போட்டிகளில் 3 ஆயிரம் ரன்களைக் கடந்த ஒரே வீராங்கனை என்ற பெருமையும் அவரைச் சேரும்.

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து திடீரென அவர் ஓய்வு முடிவை அறிவித்துள்ளது கிரிக்கெட் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

3,200 போதை மாத்திரைகள் பறிமுதல்: 6 போ் கைது

SCROLL FOR NEXT