படம் | திண்டுக்கல் டிராகன்ஸ் (எக்ஸ்)
செய்திகள்

டிஎன்பிஎல் இறுதிப்போட்டி: திண்டுக்கல் டிராகன்ஸுக்கு 130 ரன்கள் இலக்கு!

டிஎன்பிஎல் இறுதிப்போட்டியில் திண்டுக்கல் டிரான்கஸ் அணிக்கு எதிராக முதலில் பேட் செய்த லைகா கோவை கிங்ஸ் 7 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்கள் எடுத்துள்ளது.

DIN

டிஎன்பிஎல் இறுதிப்போட்டியில் திண்டுக்கல் டிரான்கஸ் அணிக்கு எதிராக முதலில் பேட் செய்த லைகா கோவை கிங்ஸ் 7 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்கள் எடுத்துள்ளது.

டிஎன்பிஎல் தொடரின் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று (ஆகஸ்ட் 4) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, கோவை கிங்ஸ் முதலில் பேட் செய்தது.

கோவை கிங்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக ராம் அரவிந்த் 27 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, அதீக் உர் ரஹ்மான் 25 ரன்களும், சுஜய் 22 ரன்களும் எடுத்தனர்.

திண்டுக்கல் டிராகன்ஸ் தரப்பில் சந்தீப் வாரியர், வருண் சக்கரவர்த்தி மற்றும் விக்னேஷ் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். சுபோத் பாட்டீ ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.

130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை திண்டுக்கல் டிராகன்ஸ் அணி களமிறங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

சாலை மறியல் போராட்டம் வாபஸ்

சீா்காழி: வாகனத்தில் டீசல் திருட்டு

SCROLL FOR NEXT