பாரீஸ் பாராலிம்பிக்: தங்கம் வென்றார் அவனி லெகரா! மோனாவுக்கு வெண்கலம்
பாரீஸ் பாராலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெகரா தங்கம் வென்றார்.
பாரீஸ் பாராலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெகரா தங்கம் வென்றார். மூன்றாவது இடத்தைப் பிடித்த மோனா அகர்வாலுவுக்கு வெண்கலப்பதக்கம் கிடைத்தது.
பாரீஸ் பாராலிம்பிக்ஸில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை அவனி லெகரா தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
டோக்கியோ பாராலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றவரான அவனி லெகரா, தகுதிச் சுற்றில் இரண்டாவது இடத்தைப் பிடித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
Advertisement
Advertisement
இறுதிச்சுற்றில் 8 வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்த நிலையில், இந்தியா சார்பில் அவனி லெகரா, மோனா அகர்வால் கலந்து கொண்டனர்.
இந்தியாவின் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெகரா 249.7 புள்ளிகளுடன் முதலிடமும், தென் கொரியாவின் லீ யுன்ரி 246.8 புள்ளிகளுடன் இரண்டாமிடமும், மற்றொரு இந்திய வீராங்கனையான மோனா அகர்வால் 228.7 புள்ளிகளுடன் மூன்றாமிடமும் பிடித்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.