கோப்புப்படம் 
செய்திகள்

ரஞ்சிக் கோப்பை அரையிறுதி: தமிழ்நாட்டுக்கு எதிராக களமிறங்கும் ஸ்ரேயாஸ் ஐயர்!

தமிழ்நாட்டுக்கு எதிரான அரையிறுதிப் போட்டிக்கான மும்பை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

ரஞ்சிக் கோப்பையில் தமிழ்நாட்டுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் மும்பை அணியில் இணைந்துள்ள்ளார்.

ரஞ்சிக் கோப்பைத் தொடரின் காலிறுதிப் போட்டிகள் இன்றுடன் நிறைவடைந்தன. மத்திய பிரதேசம், விதர்பா, தமிழ்நாடு மற்றும் மும்பை அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. முதல் அரையிறுதிப் போட்டியில் மத்திய பிரதேசம் மற்றும் விதர்பா அணிகள் மோதுகின்றன. இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் தமிழ்நாடு மற்றும் மும்பை அணிகள் மோதவுள்ளன.

இந்த நிலையில், தமிழ்நாட்டுக்கு எதிரான அரையிறுதிப் போட்டிக்கான மும்பை அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் இடம்பெற்றுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

அரையிறுதிப் போட்டிக்கான மும்பை அணி விவரம்

அஜிங்க்யா ரஹானே, ஸ்ரேயாஸ் ஐயர், பிரித்வி ஷா, பூபென் லால்வானி, அமோக் பட்கல், முஷீர் கான், பிரசாத் பவார், ஹார்திக் தமோர், ஷர்துல் தாக்குர், ஷாம்ஸ் முலானி, தனுஷ் கோட்டியன், ஆதித்யா துமால், துஷார் தேஷ்பாண்டே, மோஹித் அவஸ்தி, ராய்ஸ்டன் தியாஸ் மற்றும் தவால் குல்கர்னி.

தசைப்பிடிப்பு காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 3 போட்டிகளில் ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய அணியில் இடம்பெறாமலிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

SCROLL FOR NEXT