FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

பாகிஸ்தான் டி20 அணிக்கு புதிய துணைக் கேப்டன் நியமனம்!

பாகிஸ்தான் அணியின் துணைக் கேப்டனாக அந்த அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வான் நியமிக்கப்பட்டுள்ளார்.

Updated On : 9 ஜனவரி 2024, 7:48 pm IST
படம் | ஐசிசி
பகிர்:

பாகிஸ்தான் அணியின் துணைக் கேப்டனாக அந்த அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வான் நியமிக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5  போட்டிகள் டி20 தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான இந்த டி20 தொடரின் முதல் போட்டி நாளை மறுநாள் (ஜனவரி 12) ஆக்லாந்தில் நடைபெறுகிறது.

இந்த நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணியின் துணைக் கேப்டனாக முகமது ரிஸ்வான் நியமிக்கப்பட்டுள்ளார். 

பாகிஸ்தான் டி20 அணியின் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்ட முகமது ரிஸ்வான், பாகிஸ்தான் டி20 அணியின் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டதை பெருமையாக கருதுகிறேன். எனக்கு இந்த பொறுப்பை வழங்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு நான் கடமைப் பட்டிருக்கிறேன். பாகிஸ்தான் அணியின் கேப்டன், அணியில் உள்ள அனைவருடனும் இணைந்து பணியாற்ற ஆவலாக உள்ளேன் என்றார்.

இதற்கு முன்னதாக பாகிஸ்தான் அணியின் துணைக் கேப்டனாக செயல்பட்டு வந்த ஷதாப் கான் காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலிருந்து விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments