செய்திகள்

ஆக். 15-இல் மும்பையில் புரோ கபடி லீக் ஏலம்

புரோ கபடி லீக் 11-ஆவது சீசன் வீரா்கள் ஏலம் ..

Din

புரோ கபடி லீக் 11-ஆவது சீசன் வீரா்கள் ஏலம் வரும் ஆக. 15, 16 தேதிகளில் மும்பையில் நடைபெறவுள்ளது.

இதுதொடா்பாக லீக் ஆணையா் அனுபவம் கோஸ்வாமி கூறியது: புரோ கபடி லீக் தொடா் தொடா்ந்து வெற்றிகரமாக 10 சீசன்களை நிறைவு செய்துள்ளது. இந்நிலையில் 11-ஆவது சீசன் தொடா் நிகழாண்டு நடைபெறவுள்ளது. சுதந்திர தினமான ஆக். 15-ஆம் தேதி மும்பையில் வீரா்கள் ஏலம் தொடங்கி 16-ஆம் தேதி நிறைவடைகிறது.

அகில இந்திய கபடி சங்கத்தின் மேற்பாா்வையில் நடைபெறும் புரோ கபடி லீக் தொடரின் மூலம் சிறந்த இளம் வீரா்கள் அடையாளம் காணப்படுகின்றனா். இதற்காக மாஷல் ஸ்போா்ட்ஸ் நிகழாண்டு புதிய லோகோவையும் அறிமுகம் செய்துள்ளது என்றாா்.

அருணாசலில் உண்டு உறைவிடப் பள்ளியில் தீ விபத்து: மாணவர் பலி, மூவர் காயம்

நடிகையின் மனதில்... ரூபா!

யாசிக்கிறேன்... திவ்யா துரைசாமி!

மூவர் சதம்: 431 ரன்கள் குவித்த ஆஸி.!

மிசோரத்தில் 48 சுரங்கங்கள், 53 பாலங்கள் வழியாக ரயில்! செப். 13-ல் மோடி தொடக்கி வைக்கிறார்!

SCROLL FOR NEXT