செய்திகள்

ரஞ்சி அரையிறுதி: விதர்பா 261 ரன்கள் முன்னிலை!

ரஞ்சி கோப்பையில் மத்திய பிரதேசத்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் விதர்பா 261 ரன்கள் முன்னிலை.

DIN

ரஞ்சி கோப்பையில் மத்திய பிரதேசத்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் விதர்பா 261 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.

ரஞ்சி கோப்பையின் அரையிறுதிப் போட்டியில் விதர்பா மற்றும் மத்திய பிரதேச அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதல் இன்னிங்ஸில் விளையாடிய விதர்பா 170 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கரூண் நாயர் 63 ரன்கள் எடுத்தார். மத்திய பிரதேசம் தரப்பில் ஆவேஷ் கான் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

மத்திய பிரதேசம் முதல் இன்னிங்ஸில் 252 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஹிமான்ஷு மந்த்ரி 126 ரன்கள் எடுத்தார். அதில் 13 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். விதர்பா தரப்பில் உமேஷ் மற்றும் யஷ் தாக்குர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இதனையடுத்து, தனது இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வரும் விதர்பா மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 343 ரன்கள் குவித்துள்ளது. யஷ் ரத்தோட் 97 ரன்களுடனும், ஆதித்யா 14 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொஞ்சும் கண்கள்... ஜன்னத் ஜுபைர்!

மெழுகு டாலு நீ.... ஷிவானி நாராயணன்!

இவர் யாரோ...?

அஜித்தைச் சந்தித்த பிரபல இயக்குநர்கள்! ஏன்?

பெண்மையின் அழகு... ரச்சித்தா மகாலட்சுமி

SCROLL FOR NEXT