எனது சாதனையை ஜெய்ஸ்வால் முறியடிப்பார்: பிரையன் லாரா நம்பிக்கை!
பிரபலமான மேற்கிந்திய தீவுகள் அணியின் கிரிக்கெட் வீரர் பிரையன் லாரா ஜெய்ஸ்வாலை புகழ்ந்து பேசியுள்ளார்.
2023ஆம் ஆண்டு டெஸ்டில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக அறிமுகமானார் இளம் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால். 22 வயதாகும் ஜெய்ஸ்வால் 9 டெஸ்ட் போட்டிகளில் 1028 ரன்களை அடித்துள்ளார். இதில் 2 இரட்டை சதங்கள், 3 சதங்கள், 4 அரைசதங்கள் அடங்கும்.
டெஸ்ட் போட்டியில் பிரைன் லாரா 400 ரன்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். இதுவரை யாரும் அந்த சாதனையை முறியடிக்கவில்லை. லாரா தற்போது சன்ரைசர்ஸ் அணியின் பயிற்சியாளராக இருக்கிறார்.
ஐபிஎல் போட்டிகளின்போது சந்தித்து கொண்ட லாரா ஜெய்ஸ்வால் புகைப்படங்கள் வைரலாகின. இந்நிலையில் லாரா ஜெய்ஸ்வால் குறித்து பேசியதாவது:
Advertisement
Advertisement
எனது சாதனை ஆபத்தில் இருக்கிறது. ஜெய்ஸ்வால் அதை முறியடிக்க நல்ல வாய்ப்பு இருக்கிறது. ஏற்கனவே இரண்டு இரட்டை சதங்கள் அடித்துவிட்டார். நல்ல தகுதியான பேட்டர்.
அவர் அற்புதமான வீரர் என்பதை மட்டுமே இப்போது சொல்ல முடியும். அவரிடம் பிடித்தது என்னவென்றால் மிகவும் பணிவாக இருக்கிறார். கற்றலில் ஆர்வமாக இருக்கிறார். நான் ஜெய்ஸ்வாலை முதன்முதலில் பார்த்தபோதே (கடைசி வருடம்) அவரிடம் உணர்ச்சிபூர்வமாக ஒன்றிவிட்டேன். நான் ஒருமுறை அவரை விடுதியில் சந்தித்தேன். 4 மணிக்கு கிளம்புவேன் என கூறியதும் அவர் கேள்விகளை கேட்டுக்கொண்டே இருந்தார். அது அவரது தனித்தன்மை.
எவ்வளவு முடியுமோ அவ்வளவு கற்றுகொள்ள முயற்சிக்கிறார். எங்களது உரையாடல்கள் அவரை எப்படி இன்னும் நல்ல கிரிக்கெட்டர் ஆக்குவது என்பதே. எனது தொலைபேசி எண்ணை வைத்திருக்குபவருக்கு நான் எப்போதும் தொடர்புகொள்ள கூடியவனாக இருக்கிறேன். கிரிக்கெட்டை பற்றி பேசுவது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.
இந்த ஐபிஎல் தொடரில் ஜெய்ஸ்வால் 11 போட்டிகளில் 320 ரன்கள் எடுத்துள்ளார். முதலில் சொதப்பிய ஜெய்ஸ்வால் தற்போது நல்ல ஃபார்மில் விளையாடி வருகிறார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.