FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

மேக்ஸ்வெல் விளாசல்: தெ.ஆ.வை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றிய ஆஸ்திரேலியா!

டி20 தொடரைக் கைப்பற்றிய ஆஸ்திரேலியா...

Updated On : 16 ஆகஸ்ட் 2025, 9:30 pm IST
தொடரை வென்ற மகிழ்ச்சியில் ஆஸ்திரேலிய அணியினர்.
பகிர்:

தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இறுதி டி20 போட்டி நிறைவடைந்தது.

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள தெ.ஆ. அணி முதல் இரண்டு டி20 போட்டிகளில் ஒன்றில் தோற்று ஒன்றில் வெற்றியைப் பெற்றதால் போட்டித்தொடர் 1 - 1 என்கிற சமநிலையில் இருந்தது.

இந்த நிலையில், மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று துவங்கியது. இதில், முதலில் பேட்டிங் செய்த தெ. ஆ. அணி 7 விக்கெட்கள் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக, அதிரடியாக விளாசிய டெவால்ட் பிரேவிஸ் 53 (26 பந்துகளில்) ரன்கள் எடுத்தார்.

Advertisement

Advertisement

173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடனும் தொடரை வெல்லும் முனைப்புடனும் பேட்டிங்கை தொடர்ந்த ஆஸ்திரேலியா அணி முதல் விக்கெட்டுக்கு பொறுமையாக ரன்களைச் சேர்க்க, முதலில் களமிறங்கி மிட்சல் மார்சல் 54 ரன்களில் ஆட்டமிழக்க, மெல்ல ஆட்டம் தெ.ஆ. பக்கம் மாறத் துவங்கியது.

இருந்தும் மேக்ஸ்வெல்லின் அதிரடியான ஆட்டத்தால் இறுதியாக கடைசி ஓவரில் 10 ரன்கள் எடுத்தால் வெற்றி என ஆட்டம் இரு பக்கத்திற்கும் சாதகமாக மாற, மேக்ஸ்வெல் பவுண்டரிகளை விளாசி அணியை வெற்றி பெறச் செய்தார்.

இந்த வெற்றியால், தென்னாப்பிரிக்க அணியை 2 - 1 என்கிற கணக்கில் வீழ்த்தி ஆஸி. தொடரைக் கைப்பற்றியது. இறுதி ஆட்டத்தில் 36 பந்துகளில் 62 ரன்கள் எடுத்த மேக்ஸ்வெல் ஆட்ட நாயகனாகவும் டிம் டேவிட் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

summary

australia won the t20 tournament against south africa

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments