இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி.
188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி, 18.5 ஓவர்களில் 111 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.டாஸ் வென்று முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்தது.நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷிவம் துபேவும் 37 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.இந்தியா தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜஸ்பிரித் பும்ரா 4 ஓவர்களில் வெறும் 15 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.அர்ஷ்தீப் சிங் இரண்டு விக்கெட்டுகளையும், வருண் சக்கரவர்த்தி மற்றும் ஷிவம் துபே தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.வருண் சக்கரவர்த்தியின் பந்துவீச்சில் டேவிட் மில்லர் மற்றும் பிரேவிஸ் இருவரும் பவுண்டரி மற்றும் சிக்ஸர்களை விளாசினர்.அதிரடியாக விளையாடிய டேவிட் மில்லர் 35 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து வருண் சக்கரவர்த்தி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.மறுமுனையில் அதிரடியில் அசத்திய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 24 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார்.தென்னாப்பிரிக்கா தரப்பில் மார்கோ யான்சென் 4 விக்கெட்டுகளையும், கேசவ் மகாராஜ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.