FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

கோலி, ரோஹித் தரமிறக்கமா? சம்பளத்தில் ரூ. 2 கோடி குறையும் வாய்ப்பு!

ரோஹித் சர்மா, விராட் கோலியின் சம்பளத்தில் ரூ. 2 கோடி குறைக்கப்பட வாய்ப்பிருப்பதாகத் தகவல்

Updated On : 11 டிசம்பர் 2025, 9:27 pm IST
ரோஹித் சர்மா - விராட் கோலி - கோப்புப் படம்
பகிர்:

ரோஹித் சர்மா, விராட் கோலியின் சம்பளம் குறைக்கப்பட வாய்ப்பிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒப்பந்தத்தின்படி, டி20, டெஸ்ட், ஒருநாள் போட்டி ஆகிய 3 வடிவ போட்டிகளில் விளையாடுபவர்கள் மட்டுமே ஏ பிளஸ் (A+) தரவரிசையில் இருப்பர்.

ஆனால், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் டி20, டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்று ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகின்றனர்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இவர்கள் இருவரையும் ஏ பிளஸ் வரிசையிலிருந்து ஏ அல்லது அதற்குக் கீழான வரிசைக்கு கீழிறக்க வாய்ப்புகள் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஏ பிளஸ் வரிசையில் இருப்பவர்களுக்கு ஆண்டு ஊதியமாக ரூ. 7 கோடி வழங்கப்பட்டு வரும்நிலையில், ஏ வரிசைக்குக் கீழிறக்கப்பட்டால், அவர்களின் ஊதியத்தில் ரூ. 2 கோடி குறைக்கப்பட்டு, ரூ. 5 கோடி மட்டுமே வழங்கப்படும்.

கிரிக்கெட் வாரியத்தின் இந்தக் கொள்கை, வீரர்களின் போட்டித் தொகையையோ கிரிக்கெட்டில் அவர்களுக்கு இருக்கும் நற்பெயரையோ எந்த வகையிலும் பாதிக்காது.

அதுமட்டுமின்றி, மூன்று வடிவ போட்டிகளிலும் விளையாடி வரும் சுப்மன் கில், ஏ பிளஸ் வரிசைக்கு முன்னேறவும் வாய்ப்புகள் உள்ளன.

இந்த ஒப்பந்தம் குறித்து, டிசம்பர் 22 ஆம் தேதியில் பிசிசிஐ-யின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்க: கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியுடன் புகைப்படம் எடுக்க ரூ. 10 லட்சம் மட்டுமே!

summary

Virat Kohli, Rohit Sharma's salaries likely to be slashed by INR 2 crore by BCCI

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments