டி20 உலகக் கோப்பை

பாகிஸ்தான் டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு: இந்திய அணியில் வருண் சக்ரவர்த்தி உள்ளே

DIN


இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

டி20 உலகக் கோப்பையில் அதிக எதிர்பார்ப்புகளைக் கிளப்பியுள்ள இந்தியா, பாகிஸ்தான் ஆட்டம் துபையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.

டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அஸாம் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். பாகிஸ்தான் அணியில் சனிக்கிழமை அறிவிக்கப்பட்ட 12 பேரில் ஹைதர் அலி விளையாடும் அணியில் இடம்பெறவில்லை.

இந்திய அணியும் பந்துவீச்சைத் தேர்வு செய்யவிருந்ததாக கேப்டன் விராட் கோலி தெரிவித்தார். இந்திய அணியில் இஷான் கிஷன், ரவிச்சந்திரன் அஸ்வின், ராகுல் சஹார், ஷர்துல் தாக்குர் ஆகியோர் இடம்பெறவில்லை.

சுழற்பந்துவீச்சாளர்களாக வருண் சக்ரவர்த்தி, ரவீந்திர ஜடேஜா களமிறங்குகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்தில் இளைஞா் பலி

பணம் கையாடல்: நீதிமன்ற எழுத்தா் மீது வழக்கு

பறவைக் காய்ச்சல்: முந்தலில் வாகன சோதனை தீவிரம்

கொடைக்கானலில் இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால் போராட்டம்: உணவகங்கள், தங்கும் விடுதி உரிமையாளா்கள் சங்கம் முடிவு

எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை வனப் பகுதிக்கு எடுத்துச் சென்றால் நடவடிக்கை: வனத் துறையினா் எச்சரிக்கை

SCROLL FOR NEXT