இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு டாஸ் சுண்டுவது மழையால் தாமதம் ஆகியுள்ளது.
டி20 உலகக் கோப்பைத் தொடரில் நியூயார்க்கில் நடைபெறும் இன்றையப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு எப்போதும் அதிக அளவிலான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கும். இந்த முறையும் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு பஞ்சமில்லை.
இந்த நிலையில், நியூயார்க்கில் மழை பெய்து வருவதால் இரு அணிகளுக்கும் இடையிலான இந்த போட்டிக்கு டாஸ் சுண்டுவதில் தாமதம் ஆகியுள்ளது. மழை நின்றவுடன் விரைவில் ஆட்டம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.