ரயில் கட்டண உயர்வை கண்டித்து விருதுநகரில் புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
விருதுநகரில் ரயில் கட்டண உயர்வைக் கண்டித்து புதிய தமிழகம் கட்சியினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகரில் ரயில் கட்டண உயர்வைக் கண்டித்து புதிய தமிழகம் கட்சியினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் ரயில் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு புதிய தமிழகம் கட்சியின் மாவட்ட செயலாளர் ராமராஜ் தலைமை வகித்தார். இதில், ரயில் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த பெண் உள்பட 90 பேர் கலந்து கொண்டனர்.
இதேபோல், ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்திற்கு புதிய தமிழகம் கட்சியின் ஒன்றியச் செயலாளர் கண்ணன் தலைமையில் 45 பேரும், சிவகாசியில் சட்டப்பேரவை தொகுதி செயலாளர் முத்துகிருஷ்ணன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 14 பேரும் கலந்து கொண்டனர்.
Advertisement