முகப்பு
தமிழ்நாடு

விருதுநகர் கூட்டுறவு விற்பனை இணைய உரக்கிடங்கில் இருப்பு குறித்து ஆட்சியர் ஆய்வு

விருதுநகர் மாவட்ட கூட்டுறவு விற்பனை இணைய உரக் கிடங்கில் இருப்பு குறித்து ஆட்சியர் சனிக்கிழமை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

Updated On : 3 அக்டோபர், 2015 at 5:42 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 12:22 PM

விருதுநகர் மாவட்ட கூட்டுறவு விற்பனை இணைய உரக் கிடங்கில் இருப்பு குறித்து ஆட்சியர் சனிக்கிழமை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

 கூட்டுறவு விற்பனை இணையத்தில் உரங்களின் இருப்பு வகைகள் குறித்து ஆட்சியர் வே.ராஜாராமன் ஆய்வு செய்தார். அப்போது, கிரிப்கோ நிறுவனத்தின் யூரியா 100 மெ.டன், இப்கோ நிறுவன யூரியா 140 மெ.டன், ஐபிஎல் நிறுவன டி.ஏ.பி 184 மெ.டன், கோரமண்டல் நிறுவன சூப்பர் பாஸ்பேட் 42 மெ.டன் ஆகியவை இருப்பு இருந்ததை ஆய்வு செய்தார்.

மேலும், உடனடியாக மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் தேவைப்பட்டியல் பெற்று பிரித்து அனுப்பி வைக்குமாறு கூட்டுறவு விற்பனை இணைய மேலாளருக்கு உத்தரவிட்டார்.

Advertisement

 அதேபோல், ராபி பருவ சாகுபடிக்கு தேவையான யூரியா, டிஏபி உள்ளிட்ட உரங்களை வேளாண்மை துறை மூலம் விவரங்கள் பெற்று அவற்றை இருப்பு வைப்பதற்கு துரித நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது வேளாண்மை இணை இயக்குநர் சி.கனகராஜன், தரக்கட்டுப்பாடு வேளாண்மை உதவி இயக்குநர் விவேகானந்தன் மற்றும் டான்பெட் மண்டல மேலாளர்(பொறுப்பு) சண்முகபிரியா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.