முகப்பு
தமிழ்நாடு

கடையை சேதப்படுத்தி, கடைக்காரருக்கு மிரட்டல்: இருவர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கடைகளைச் சேதப்படுத்தி, கடைக்காரரை மிரட்டிய இருவரை போலீஸார் கைது செய்தனர்.

தமிழ்நாடு

கடையை சேதப்படுத்தி, கடைக்காரருக்கு மிரட்டல்: இருவர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கடைகளைச் சேதப்படுத்தி, கடைக்காரரை மிரட்டிய இருவரை போலீஸார் கைது செய்தனர்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:58 AM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கடைகளைச் சேதப்படுத்தி, கடைக்காரரை மிரட்டிய இருவரை போலீஸார் கைது செய்தனர்.

வத்திராயிருப்பு, நாடார் தெருவைச் சேர்ந்தவர் த.காசிராஜன் (52). இவர் நாடார் பஜாரில் இட்லிக்கடை வைத்துள்ளார். நேற்று(செவ்வாய்கிழமை) இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை அடைக்க பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு மேலப்பாளையத்தைச் சேர்ந்த ச.சிறுத்தை (எ) லிங்கம் (24), கூ.செந்தில்குமார் (24) ஆகிய இருவர் வந்து இட்லி கேட்டுள்ளார்கள். காசிராஜன் இட்லி முடிந்துவிட்டது என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமுற்ற இருவரும் நாங்க கேட்டு இல்லைன்னு எப்படி சொல்லலாம் என்று கூறி, கடையின் பல்புகளை அடித்து உடைத்துள்ளனர். பக்கத்துக் கடையைச் சேர்ந்த முத்துக்குமார் கடையை சேதப்படுத்திக் கொண்டிருந்த இருவரையும கண்டிதுள்ளார். அவரையும் ஆபாசமாகப் பேசி, அவரது கடையின் மின்வயர்களை இருவரும் அறுத்து எறிந்துள்ளார்கள். பின்னர் பெரிய கட்டைகளைக் காட்டி நாளைக்கு இங்கு இருவரது கடைகளும் இருக்கக் கூடாது என்று கூறி மிரட்டிச் சென்றுள்ளார்கள்.

இது குறித்து காசிராஜன், வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து சிறுத்தை (எ) லிங்கம், செந்தில்குமார் ஆகியோரைக் கைது செய்து, ஸ்ரீவில்லிபுத்தூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 1-ல் முன்னிலைப்படுத்தி காவலில் வைத்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →