விராலிமலையில் தனியார் மருத்துவமனை ஊழியர் மாயம்
விராலிமலை அருகே வேலைக்கு சென்ற மகளை காணவில்லை என்று தந்தை காவல் நிலையத்தில் நேற்று புகார் தெரிவித்துள்ளார்.
விராலிமலை அருகே வேலைக்கு சென்ற மகளை காணவில்லை என்று தந்தை காவல் நிலையத்தில் நேற்று புகார் தெரிவித்துள்ளார்.
விராலிமலை அருகே உள்ள ராசாளிப்பட்டியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன்(விவசாயி), இவரது மகள் முத்துமாரி(21) மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் இவர் கடந்த 1-ஆம் தேதி வேலைக்கு சென்றவர் வீடுதிரும்பவில்லையாம், உறவினர்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் முத்துமாரி கிடைக்காத நிலையில் விராலிமலை காவல் நிலையத்தில் முத்துமாரியின் தந்தை கிருஷ்ணன் அளித்த புகாரினை தொடர்ந்து காவல் ஆய்வாளர் அ.மா.செந்தில்மாறன் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.