ஸ்ரீஆண்டாள் கோவிலில் கிருஷ்ண ஜயந்தி விழா
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் கோவிலில் கிருஷ்ண ஜயந்தி விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தமிழ்நாடுஸ்ரீஆண்டாள் கோவிலில் கிருஷ்ண ஜயந்தி விழா
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் கோவிலில் கிருஷ்ண ஜயந்தி விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் கோவிலில் கிருஷ்ண ஜயந்தி விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.
ஸ்ரீகண்ணன் ஆல இலையில் புறப்பாடு நடைபெற்றது பின்னர் ஸ்ரீஆண்டாள், ரெங்கமன்னார், பெரிய பெருமாள் 8 வீதிகளில் புறப்பாடு நடைபெற்றது. 4 வீதிகளில் உறியடி நடைபெற்றது. ஆண்டாள் சன்னதி முன்பு வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
முன்னதாக சனிக்கிழமை இரவு ஸ்ரீஆண்டாள் கோவிலில் நடைபெற்ற கிருஷ்ண ஜயந்தி விழாவில் ஜி.அனந்தராமன் பட்டர் ஸ்ரீஜயந்தி புராணம் படித்தார்.
நிகழ்ச்சியில் கோவில் ஸ்தானிகம் ரெங்கராஜன் (எ) ரமேஷ், அ.சுதர்ஸன் பட்டர் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் கி.ரவிச்சந்திரன் செய்திருந்தார்.