ரூ.3 கோடியில் கலசலிங்கம் மணிமண்டபம்: செப்.20-ல் திறப்பு விழா
விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழக வளாகத்தில்,
தமிழ்நாடுரூ.3 கோடியில் கலசலிங்கம் மணிமண்டபம்: செப்.20-ல் திறப்பு விழா
விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழக வளாகத்தில்,
விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழக வளாகத்தில், அதன் நிறுவனத் தலைவர் தி.கலசலிங்கத்திற்கு ரூ.3 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மணிமண்டபம் திறப்பு விழா செப்டம்பர் மாதம் 20-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
இது குறித்து பல்கலைக்கழக வேந்தர் க.ஸ்ரீதரன் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பல்கலைக்கழகத்தின் வேந்தர் க.ஸ்ரீதரன் முன்னிலையில், வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் ஜி.விஸ்வநாதன், கலசலிங்கம் மணிமண்டபத்தைத் திறந்து வைக்கிறார்.
பட்டிமன்ற பேச்சாளரும் வங்கி அதிகாரியுமான எஸ்.ராஜா சிறப்புரையாற்றுகிறார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை துணை வேந்தர் ச.சரவணசங்கர், பதிவாளர் வெ.வாசுதேவன் ஆகியோர் தலைமையில் பேராசிரியர்கள் செய்து வருகிறார்கள்.