அரசுப் பள்ளி ஆசிரியை வீட்டை உடைத்து நகை திருட்டு
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசுப் பள்ளி ஆசிரியை வீட்டை உடைத்து பீரோவில் இருந்த நகைகளைத் திருடிச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகிறார்கள்.
தமிழ்நாடுஅரசுப் பள்ளி ஆசிரியை வீட்டை உடைத்து நகை திருட்டு
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசுப் பள்ளி ஆசிரியை வீட்டை உடைத்து பீரோவில் இருந்த நகைகளைத் திருடிச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகிறார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசுப் பள்ளி ஆசிரியை வீட்டை உடைத்து பீரோவில் இருந்த நகைகளைத் திருடிச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகிறார்கள்.
கிருஷ்ணன் கோவில், ஸ்ரீராம் நகரைச் சேர்ந்தவர் நடராஜன் மனைவி அனிதா. இவரது கணவர் இறந்துவிட்டார். அனிதா சீலநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக வேலை செய்து வருகிறார்.
சனிக்கிழமை மதியம் வீட்டை பூட்டிவிட்டு ஊருக்குச் சென்றுள்ளார். திரும்பி இன்று காலை (திங்கள்கிழமை) வந்து பார்த்தபோது, வீட்டின் கிரில் கேட் உடைக்கப்பட்டிருந்துள்ளது. உள்ளே இருந்த மரக்கதவையும் உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர் பீரோவில் இருந்த 3 பவுன் தங்க பொருட்கள் மற்றும் 8 ஜோடி வெள்ளி கொலுசுகளைத் திருடிச் சென்றுள்ளார்.
இது குறித்து ஆசிரியை அனிதா, கிருஷ்ணன்கோவில் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.