தமிழ்நாடு

உலக பாரம்பரிய தினத்தையொட்டி மாமல்லபுரத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டணம் இல்லை

தினமணி

உலக பாரம்பரிய தினத்தையொட்டி, மாமல்லபுரம் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒருநாள் மட்டும் கட்டணம் இல்லாமல் திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டனர்.

ஏப்ரல் 18-ஆம் தேதியை உலக பாரம்பரிய தினமாக இந்திய தொல்லியல் துறை அறிவித்துள்ளது. அதன்படி இந்நாளில் தொல்லியல் துறையால் நிர்வகிக்கப்படும் இடங்களில் பார்வையாளர்களுக்கு நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை.

இந்த ஆண்டும் தொல்லியல் துறை சார்பில் உலக பாரம்பரிய தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சுற்றுலாப் பயணிகளுக்கு பாரம்பரிய சின்னங்கள், இடங்களைப் பார்வையிட கட்டணம் வசூலிக்கப்படாமல் அனுமதிக்கப்பட்டனர்.

இதனால் மாமல்லபுரத்துக்கு அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வந்து பார்வையிட்டுச் சென்றனர். இதுபோல காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல தொல்லியல் இடங்களைப் பார்வையிடவும் திங்கள்கிழமை கட்டணம் வசூலிக்கப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

SCROLL FOR NEXT