பண்ருட்டியில் கொட்டும் மழையிலும் ஆர்வத்துடன் வாக்களித்து வரும் மக்கள்
பண்ருட்டி சட்டமன்றத் தொகுதியில் காலை 9 மணியளவில் 17 சதவீதமும், 11 மணியளவில் 34 சதவீத வாக்குப்பதிவு நடந்துள்ளது.
பண்ருட்டி: பண்ருட்டி சட்டமன்றத் தொகுதியில் காலை 9 மணியளவில் 17 சதவீதமும், 11 மணியளவில் 34 சதவீத வாக்குப்பதிவு நடந்துள்ளது.
பண்ருட்டியில் நேற்றிரவு முதல் மழை பெய்து வருகின்றது. எனினும் வாக்குப்பதிவு எந்தவித தங்கு தடையும் இல்லாமல் நடைபெறுகின்றது.
கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருவதாக பண்ருட்டி தேர்தல் நடத்தும் அதிகாரி மதியழகன் கூறியுள்ளார்.