முகப்பு
தமிழ்நாடு

தேனி: கூடலூர் அருகே மின்சாரம் தாக்கி பெண் யானை சாவு

தேனி மாவட்டம் கூடலூர் அருகே தனியார் தோட்டத்தில் மின்சாரம் தாக்கி பெண் யானை இறந்து போனது.

Updated On : 28 மே, 2016 at 2:29 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 10:52 PM

தேனி: தேனி மாவட்டம் கூடலூர் அருகே தனியார் தோட்டத்தில் மின்சாரம் தாக்கி பெண் யானை இறந்து போனது.

தேனி மாவட்டம் கூடலூர் அருகே வெட்டுக்காடு வனப்பகுதியில் கப்பாமடை புலத்தில் தனியார் தோட்டம் ஒன்றில் கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது. இதில் அனுமதி பெறாமல் மின்சாரத்துடன் இணைத்து மின்வேலியாக பயன்படுத்தியிருந்ததாக கூறப்படுகிறது.

இதில் இப்பகுதியில் சுற்றித்திரிந்த சுமார் 16 வயது பெண் யானை ஒன்று வேலியை கடக்க முயன்றபோது மின்சாரம் தாக்கியது. சம்பவ இடத்திலேயே யானை இறந்து போனது. கூடலூர் வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.