முகப்பு
தமிழ்நாடு

தஞ்சாவூர், அரவக்குறிச்சி தேர்தலை ஒத்திவைக்கக் கோரிய மனு: உயர்நீதிமன்றம் தள்ளுபடி!

அரவக்குறிச்சி, தஞ்சாவூர் இடைத்தேர்லை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை மதுரை உயர் நீதிமன்ற கிளை  தள்ளுபடி செய்தது.

Updated On : 1 நவம்பர், 2016 at 3:43 PM
பகிர்:

மதுரை: அரவக்குறிச்சி, தஞ்சாவூர் இடைத்தேர்லை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை மதுரை உயர் நீதிமன்ற கிளை  தள்ளுபடி செய்தது.

பணப்பட்டுவாடா குற்றச்சாட்டுக்கு ஆளான வேட்பாளர்களே  மீண்டும் தேர்தலில் நிற்பதால் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் இடைத்தேர்லை ஒத்திவைக்க வேண்டும் என்று மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் கே.பிரகாஷ், உயர் நீதிமன்ற கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு முதலாம் அமர்வில் செவ்வாய்க்கிழமை அன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த மனுவை விசாரிக்க வலியுறுத்தவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து வழக்கறிஞருக்கு கடுமையான கண்டங்களை தெரிவித்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.