முகப்பு
தமிழ்நாடு

பிரதமர் நரேந்திர மோடிக்கு திமுக தலைவர் கருணாநிதி பரபரப்பு கடிதம்

பிரதமர் நரேந்திர மோடிக்கும், மத்திய உருக்குத் துறை அமைச்சர் சவுத்ரி வீரேந்தர் சிங்குக்கும் திமுக தலைவர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.

Updated On : 15 அக்டோபர், 2016 at 12:56 PM
பகிர்:


சென்னை: பிரதமர் நரேந்திர மோடிக்கும், மத்திய உருக்குத் துறை அமைச்சர் சவுத்ரி வீரேந்தர் சிங்குக்கும் திமுக தலைவர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.

கருணாநிதி எழுதியுள்ள கடிதத்தில், பொதுத் துறை நிறுவனமான சேலம் உருக்காலையை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

மேலும், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட வேண்டும்.

தமிழகத்தின் அடையாளமாகத் திகழும் சேலம் உருக்காலையை தனியாருக்கு மாற்றக் கூடாது.

Advertisement

தமிழகத்தின் அடையாளமாக விளங்கும் சேது கால்வாய் திட்டம் மற்றும் சேலம் உருக்காலை, தமிழர்களின் கனவுத் திட்டம் என்றும் கருணாநிதி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய உருக்குத் துறை அமைச்சர் சவுத்ரி வீரேந்தர் சிங்குக்கும் கருணாநிதி கடிதம் அனுப்பியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.