முகப்பு
தமிழ்நாடு

ஓ. பன்னீர்செல்வம் புகாருக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்

ஓ. பன்னீர்செல்வம் கூறிய புகாருக்கு சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ்நாடு

ஓ. பன்னீர்செல்வம் புகாருக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்

ஓ. பன்னீர்செல்வம் கூறிய புகாருக்கு சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று விளக்கம் அளித்துள்ளார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:11 PM
பகிர்:

ஜெயலலிதாவின் வெளிநாட்டு சிகிச்சையை தடுத்தவர் அமைச்சர் விஜயபாஸ்கர் என்று அண்மையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்நிலையில் ஓ. பன்னீர்செல்வம் கூறிய புகாருக்கு சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து விஜயபாஸ்கர் கூறியதாவது, பதவி கிடைக்காத விரக்தியில் குழம்பிப் போய் தவறான தகவல்களை கூறி வருகிறார் ஓ.பி.எஸ். முதல்வராக இருந்த பன்னீர்செல்வம் கூறி நாங்கள் கேட்கவில்லை என கூறுவது வியப்பாக உள்ளது.

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் பற்றி மருத்துவ அறிக்கைகள் மூலம் விளக்கப்பட்டன. வெளிநாட்டு சிகிச்சை குறித்து ஆளுநரிடம் ஓ.பி.எஸ் கூறியிருக்கலாமே என்றார். 
 

முழு கட்டுரையைப் படிக்க →