தமிழ்நாடு

ஆர்.கே. நகர் தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையத்திற்கு சசிகலா புஷ்பா பாராட்டு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டுள்ள தேர்தல்  ஆணையத்திற்கு ஆணையத்திற்கு அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா

DIN

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டுள்ள தேர்தல்  ஆணையத்திற்கு ஆணையத்திற்கு அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்து 2 முறை தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதாவின் மறைவை அடுத்து அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

சென்னை ஆர்.கே.நகரில் வரும் புதன்கிழமை (ஏப்.12) நடைபெறுவதாக இருந்த இடைத்தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வாக்குக்கு பணம் கொடுப்பதாக பரவலாகப் புகார்கள் எழுந்ததை அடுத்து இந்த நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் அதிரடியான முடிவு குறித்து அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா கூறுகையில்,

இந்த தேர்தல் நியாயமான முறையில் கையாளப்படவில்லை. தொடர்ந்து பணப்பட்டுவாடா குறித்த புகார்கள் வந்து கொண்டே இருந்தது. அதுமட்டுமல்லாமல், வருமான வரித்துறையினரின் அதிரடி சோதனையும் நடத்தப்பட்டது. இதன் காரணமாக தேர்தல் ஆணையம் தலையிட்டு இந்த தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவை நான் பாராட்டுகிறேன். மேலும், இந்தியா மீண்டும் ஒரு ஜனநாயக நாடு என்பதை நிரூபித்துவிட்டது என்று பாராட்டியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேவாரம்: சாக்கலூத்து மெட்டு மலைச்சாலை அமைக்க வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம்!

டி20 உலகக் கோப்பைக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு!

விஜய்யை சந்தித்தது உண்மை : உ.பி. உடன் தமிழகத்தை ஒப்பிடவில்லை - பிரவீன் சக்கரவர்த்தி

50 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்... அமெரிக்காவுக்கு வழங்கியது வெனிசுவேலா!

நீ ஒரு கோழை.. துணிவிருந்தால் என்னை கைது செய்யுங்கள்: டிரம்ப்புக்கு கொலம்பியா அதிபர் சவால்!

SCROLL FOR NEXT