முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு
முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஓ.பன்னீர் செல்வம் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்கும்படி, அவரது அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், கடந்த மாதம் 21ஆம் தேதி, மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதனை ஏற்றுக்கொண்டு மத்திய அரசு, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இன்று முதல் ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது. இதன்படி துப்பாக்கி ஏந்திய 8 துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.