ராகுல் காந்தி மீதான தாக்குதலைக் கண்டித்து இளைஞர் காங்கிரஸார் வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்: புதுவையில் 100 பேர் கைது
ராகுல் காந்தி மீதான தாக்குதலைக் கண்டித்து புதுச்சேரி மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பில் வாயில் கருப்புத் துணி கட்டி கடற்கரை காந்தி சிலைஅருகே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
தமிழ்நாடுராகுல் காந்தி மீதான தாக்குதலைக் கண்டித்து இளைஞர் காங்கிரஸார் வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்: புதுவையில் 100 பேர் கைது
ராகுல் காந்தி மீதான தாக்குதலைக் கண்டித்து புதுச்சேரி மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பில் வாயில் கருப்புத் துணி கட்டி கடற்கரை காந்தி சிலைஅருகே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
ராகுல் காந்தி மீதான தாக்குதலைக் கண்டித்து புதுச்சேரி மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பில் வாயில் கருப்புத் துணி கட்டி கடற்கரை காந்தி சிலை
அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக 100 பேரை போலீஸார் கைது செய்தனர்.
குஜராத் மாநில மக்கள் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர். அவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற சென்ற துணை தலைவர் ராகுல்காந்தி மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தினர்.
இதற்காக மத்திய மோடி அரசு மற்றும் குஜராத் மாநில பாஜக அரசைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக புதுச்சேரி மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பில் கடற்கரை சாலை மகாத்மா காந்தி சிலை அருகே வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம்
நடைபெற்றது. இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் எம்.இளையராஜா தலைமை தாங்கினார்.
காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், மத்திய மாவட்ட மாநில தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் மகளிர் காங்கிரஸ், சேவாதள காங்கிரஸ், மாணவர் காங்கிரஸ், மற்றும் அனைத்து பிரிவு காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள் உள்பட நூற்றுக்கு மேற்பட்டோர் வாயில கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக 100-க்கு மேற்பட்டோரை போலீஸôர் கைது செய்தனர்.