புதிய அரசியல் வியூகத்தைத் தொடங்கியது எடப்பாடி அணி
தமிழக அரசியலில் மிகவும் பரபரப்பான சூழ்நிலையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பேச்சுகள் அடங்கிய சிடிக்கள் வெளியிடப்பட்டுள்ளன.
சென்னை: தமிழக அரசியலில் மிகவும் பரபரப்பான சூழ்நிலையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பேச்சுகள் அடங்கிய சிடிக்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதில், அதிமுக அம்மா அணியின் பொதுச் செயலர் விகே சசிகலா மற்றும் அவரது குடும்பத்தார் பற்றி ஜெயலலிதா பேசிய உரைகள் அடங்கியுள்ளன.
தமிழக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இன்று இரண்டு சிடிக்களை வெளியிட்டார். அதில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசிய விடியோக்கள் இடம்பெற்றுள்ளன.
Advertisement
ஒரு சிடியில், 2011ம் ஆண்டு டிசம்பர் மாதம் கட்சித் தலைவர்கள் மத்தியில் ஜெயலலிதா பேசிய உரை அடங்கியுள்ளது. அப்போது, வி.கே. சசிகலாவும், அவரது குடும்பத்தாரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருந்தனர். அது குறித்து ஜெயலலிதா அந்த உரையில் மறைமுகமாகப் பேசியிருந்தார்.
இரண்டு சிடிக்களையும் வெளியிட்டுப் பேசிய உதயகுமார், கட்சியைப் பிரிக்க நினைக்கும் யாரையும் அம்மாவின் ஆன்மா மன்னிக்காது என்று தெரிவித்தார்.