திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் 7 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் இருந்து வந்த விமானத்தில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் 4 பேரிடம், சுமார் 7 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.2.50 கோடியாகும்.
4 பேரிடம் தங்கத்தைப் பறிமுதல் செய்து மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.