ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் தேதி: அடுத்த மாதம் அறிவிப்பு?
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலுக்கான தேதி அடுத்த மாதம் (நவம்பர்) அறிவிக்க வாய்ப்புகள் இருப்பதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலுக்கான தேதி அடுத்த மாதம் (நவம்பர்) அறிவிக்க வாய்ப்புகள் இருப்பதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுகுறித்து ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:
குஜராத் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் நவம்பர் மாதம் அறிவிக்கவுள்ளது. அப்போது ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தும் தேதியும் அறிவிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. குஜராத் மாநில தேர்தல் நடக்கும்போது ஆர்.கே.நகர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறக் கூடும்.
கடந்த 2016 -ஆம் ஆண்டு, தமிழகத்தில் சட்டப் பேரவை பொதுத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் குறிப்பிட்ட சில வாக்குச்சாவடிகளில் 50 சதவீதத்துக்கும் குறைவாக வாக்குகள் பதிவாகின. வாக்குகள் குறைந்ததற்கான காரணிகள் குறித்த ஆய்வினை இந்திய தேர்தல் ஆணையம் நடத்தத் தொடங்கியுள்ளது.
தற்போது தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சென்னைக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 2016 -ஆம்ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது 10 வாக்குச்சாவடிகளில் 25 சதவீதத்துக்கும் குறைவாக வாக்குப் பதிவு நடந்துள்ளது. இது பற்றியும் ஆய்வு நடத்தப்படுவதாக இந்தியத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.