திமுகவின் கோரிக்கை நிறைவேறினால் நல்லது: எம்எல்ஏ தங்க தமிழ்செல்வன்
சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற வேண்டும் என்ற திமுகவின் கோரிக்கை நிறைவேறினால் நல்லது என்று டிடிவி தினகரன் ஆதரவு சட்டப்பேரவை உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடுதிமுகவின் கோரிக்கை நிறைவேறினால் நல்லது: எம்எல்ஏ தங்க தமிழ்செல்வன்
சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற வேண்டும் என்ற திமுகவின் கோரிக்கை நிறைவேறினால் நல்லது என்று டிடிவி தினகரன் ஆதரவு சட்டப்பேரவை உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற வேண்டும் என்ற திமுகவின் கோரிக்கை நிறைவேறினால் நல்லது என்று டிடிவி தினகரன் ஆதரவு சட்டப்பேரவை உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி தனியார் ரிசார்ட்டில் இன்று 11 வது நாளாக டிடிவி தினகரன் ஆதரவு சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்கியுள்ளனர். இந்நிலையில் இன்று காலை நடை பயிற்சி மேற்கொண்ட சட்டப்பேரவை உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் எங்கள் அணியில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது கூறியுள்ளார். அவர் சொன்னது உண்மை என்றும், நாங்கள் முதல்வரை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். திமுக தரப்பில் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
இவை இரண்டில் எது நடந்தாலும் நல்லது என தெரிவித்த அவர், நாளைக்குள் நல்ல முடிவு எடுக்கப்படும் என்றும், எங்கள் அணியில் உள்ளவர்கள் எதிர் அணிக்கு வருவார்கள் என எதிர்பார்த்தர்த்தனர். ஆனால் 10 நாட்களுக்கு மேலாகியும் எங்கள் அணியில் உள்ளவர்கள் அங்கு செல்லவில்லை. எங்களுடைய சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டேதான் இறுக்கிறது. எங்களுடைய இறுதியான நிலைபாட்டை அவர்கள் புரிந்துகொண்டனர். இதற்கு மேலும் நல்ல முடிவை எடுக்கவில்லை என்றால் அது எல்லோருக்கும் ஆபத்து என தங்க தமிழ்செல்வன் தெரிவித்தார்.