தமிழ்நாடு

ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் பணப்பட்டுவாடா: ராஜேஷ் லக்கானி பதில் மனு தாக்கல்

ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் பணப்பட்டுவாடா நடைபெற்றது தொடர்பான வழக்கில்  தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி பதில் மனு தாக்கல் செய்தார்.

DIN


சென்னை: ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் பணப்பட்டுவாடா நடைபெற்றது தொடர்பான வழக்கில்  தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி பதில் மனு தாக்கல் செய்தார்.

ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா வழங்கப்பட்டது தொடர்பாக புகார் எழுந்ததை அடுத்து, இடைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

இது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி பதில் மனுவை தாக்கல்  செய்துள்ளார்.

அந்த மனுவில், பணப்பட்டுவாடா தொடர்பாக மாநில காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதில் காவல்துறை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகளை கண்டறிந்து தண்டிக்கும் உரிமை காவல்துறைக்கே உள்ளது.

பணப்பட்டுவாடா விவகாரம் தொடர்பாக காவல்துறை எடுக்கும் நடவடிக்கையை தேர்தல் ஆணையம் கண்காணித்து வருகிறது என்று தெரிவித்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குலசை தசரா திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்!

அமெரிக்காவுக்கு மிகவும் முக்கியமான நட்பு நாடு இந்தியா! - ஹெச்1-பி விசா பிரச்னைக்கு மத்தியில் மார்கோ ரூபியோ பேச்சு

ரூ. 84,000-ஐ கடந்த தங்கம் விலை! புதிய உச்சத்தில் வெள்ளி!

மேட்டூர் அணை நிலவரம்!

ஹெச்-1பி விசா கட்டண உயர்வு நடைமுறையில் மருத்துவர்களுக்கு விலக்கு?!

SCROLL FOR NEXT