முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட வாய்ப்பில்லை

கர்நாடகத்தில் கடும் வறட்சி நிலவுவதால், காவிரியிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என அந்த மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

Updated On : 22 மார்ச், 2017 at 1:00 AM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 4:47 PM

கர்நாடகத்தில் கடும் வறட்சி நிலவுவதால், காவிரியிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என அந்த மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
காவிரி விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை செவ்வாய்க்கிழமை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, ஜூலை 11-ஆம் தேதி வரை தமிழகத்துக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதுகுறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா செய்தியாளர்களிடம் கூறியது: கர்நாடகம் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்புகளில் உள்ள அணைகள் அனைத்தும் வறண்டுள்ளன. கர்நாடகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் குடிநீர்ப் பிரச்னை நிலவி வருகிறது. இந்தச் சூழலில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.