ஜெயலலிதா மரணம்: விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் மீண்டும் ஆஜர்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆணையத்தில், ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றன் இன்று மீண்டும் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆணையத்தில், ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றன் இன்று மீண்டும் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தனிநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த ஆணையத்தில் சசிகலாவின் உறவினர்கள், முன்னாள் தலைமைச் செயலர்கள், காவல் துறை அதிகாரிகள், அரசு மருத்துவர்கள், ஜெயலலிதாவின் உதவியாளர்கள், அவரது வீட்டில் பணிபுரிந்தவர்கள் என இதுவரை 25 -க்கும் மேற்பட்டோர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.
இதையடுத்து, பூங்குன்றன் மீண்டும் ஆஜராக ஆணையம் அழைப்பாணை அனுப்பி இருந்தது. அதன்படி, அவர் இன்று மீண்டும் ஆஜராகி ஜெயலலிதாவுக்கு இருந்த உடல்நலக் குறைபாடுகள் உள்ளிட்ட விவரங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.
Advertisement
Advertisement