முகப்பு
தமிழ்நாடு

சசிகலா வற்புறுத்தலால்தான் முதல்வராகப் பதவி ஏற்றேன்: மதுரையில் ஓபிஎஸ் பேட்டி! 

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா வற்புறுத்தலால்தான் முதல்வராகப் பதவி ஏற்றேன் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மதுரையில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:17 PM
பகிர்:

மதுரை: ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா வற்புறுத்தலால்தான் முதல்வராகப் பதவி ஏற்றேன் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மதுரையில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

கட்சி நிகழ்வு ஒன்றுக்காக தேனி சென்றிருந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திரும்பும் வழியில்  மதுரையில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா வற்புறுத்தலால்தான், நான் முதல்வராகப் பதவி ஏற்றேன்.

பல்வேறு சிரமங்களுக்கு இடையில், பிரச்னைக்களை சமாளித்து திறம்பட ஆட்சி நடத்தினேன்.

இதன் காரணமாக அதிருப்தியடைந்த சசிகலா என் மீது கோபம் கொண்டு, பதவி விலகுமாறு வற்புறுத்தினார்.

எனவே கட்டாயத்தின் பேரில் எனது பதவியை ராஜினாமா செய்தேன்.

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.   

முழு கட்டுரையைப் படிக்க →