முகப்பு
தமிழ்நாடு

உச்ச நீதிமன்ற உத்தரவை பிரதமர் மீறிவிட்டார்: தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவை பிரதமர் மோடி மீறிவிட்டதாக, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு குற்றம்சாட்டினார்.

Updated On : 30 மார்ச், 2018 at 1:25 AM
பகிர்:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவை பிரதமர் மோடி மீறிவிட்டதாக, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு குற்றம்சாட்டினார்.
இதுதொடர்பாக அவர், செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறும்போது, 'காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் அதிமுக எம்.பி. கூறியதைப்போல் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை. உச்ச நீதிமன்ற உத்தரவை எந்தப் பிரதமரும் மீறியதில்லை. ஆனால் மோடி மீறியிருக்கிறார்' என்றார் அய்யாக்கண்ணு.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.