தமிழ்நாடு

சென்னையில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் விடுதி திறப்பு

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் விடுதியை சபாநாயகர் தனபால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை திறந்து வைத்தார்.

DIN

சென்னை ஓமந்தூராரில் உள்ள அரசினர் தோட்டத்தில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர் விடுதியை இன்று சபாநாயகர் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் சிலரும் பங்கேற்றனர். 

76,821 சதுர அடி, 10 தளங்கள் மற்றும் தலா 593 சதுர அடி பரப்பில் 68 அறைகள் கொண்ட இந்த விடுதியானது 33 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கட்டிடத்தில் 250 பேர் வரை அமர்ந்து மாநாட்டுக் கூடம் நடைபெறும் வகையிலும் மேல் தளத்தில் இடம் அமைக்கப்பட்டுள்ளது.  

இந்த விடுதியில் நாள் ஒன்றுக்கு தலா 300 ரூபாய் வசூலிக்கப்படும். இந்த விடுதியில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அதிகபட்சம் 5 நாட்கள் வரை அங்கு தங்கலாம். 

இந்த விடுதியில் தங்கிய சட்டப்பேரவை உறுப்பினர்களின் பதிவுகளை சட்டப்பேரவை செயலக இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். 

இந்த கட்டிடத்துக்கு 2012-ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆம்பூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

இன்று வங்கக் கடலில் உருவாகிறது புயல் சின்னம்

மாா்பக புற்றுநோய் கண்டறியும் முகாம்

விதிமுறையை பின்பற்றாத 54 தனியாா் பல்கலைக்கழகங்கள்: யுஜிசி எச்சரிக்கை

6 ஆண்டுகளுக்கு முந்தைய கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 3 போ் விடுவிப்பு

SCROLL FOR NEXT