தமிழ்நாடு

ஐரோப்பிய கண்டத்தின் உயரிய சிகரத்தில் தேசியக் கொடி: சுதந்திர தினத்தில் சென்னைப் பெண் சாதனை!

Raghavendran

73-ஆவது சுதந்திர தினத்தன்று ஐரோப்பிய கண்டத்தின் மிக உயரிய சிகரத்தில் தேசியக் கொடி ஏற்றி சென்னைப் பெண் சாதனைப் படைத்தார்.

சென்னையைச் சேர்ந்த மென் பொறியாளரான ஷக்தி நிவேதா, 73-ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் ஆகஸ்ட் 15-ஆம் தேதி ஐரோப்பிய கண்டத்திலேயே உயரமான எல்பரஸ் Mt .Elbrus சிகரத்தில் தேசியக் கொடியை ஏற்றினார்.

இதன்மூலம் தமிழகத்திலிருந்து எல்பரஸ் சிகரம் ஏறிய முதல் பெண் என்ற சாதனையைப் படைத்தார்.

மராட்டிய அரசு பயிற்சி பெற்ற வீராங்கனையான ஷக்தி நிவேதா, லடாக் பகுதியிலுள்ள இந்தியாவிலேயே நீளமான மலைப் பாதைக் கொண்ட ஸ்டோக் கங்கரி சிகரத்தில் ஏறியிருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் எவரெஸ்ட் சிகரத்தில் 17,600 அடி வரை ஏறியுள்ளதுடன், இமயமலை தொடரில் பயிற்சிகள் மேற்கொண்டவர் என்பது போன்ற சிறப்புகளுக்கு உரியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

SCROLL FOR NEXT