தமிழ்நாடு

ஆளுநர் கிரண்பேடியை திரும்பப் பெறுங்கள்: புதுச்சேரி முதல்வர் மனு

ஆளுநர் கிரண்பேடியை உடனடியாக திரும்பப் பெற நடவடிக்கை எடுக்குமாறு புதுச்சேரி முதல்வர் வி. நாராயணசாமி குடியரசுத் தலைவரிடம் மனு கொடுத்துள்ளார்.

DIN


புதுச்சேரி: ஆளுநர் கிரண்பேடியை உடனடியாக திரும்பப் பெற நடவடிக்கை எடுக்குமாறு புதுச்சேரி முதல்வர் வி. நாராயணசாமி குடியரசுத் தலைவரிடம் மனு கொடுத்துள்ளார்.

புதுச்சேரியில் நடைமுறைப்படுத்த வேண்டிய நலத்திட்டங்களையும், அமைச்சரவை எடுக்கும் முடிவுகளை செயல்படுத்துவதிலும் ஆளுநர் கிரண்பேடி முட்டுக்கட்டையாக இருக்கிறார் என்றும் நாராயணசாமி தனது கடிதத்தில் குற்றம்சாட்டியுள்ளார்.

புதுச்சேரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் இது குறித்து வலியுறுத்தி ஒரு விரிவான மனுவை அளித்திருப்பதாக செய்தியாளர்களிடம் பேசுகையில் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

புதுச்சேரி ஆளுநரை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்கும்படி குடியரசுத் தலைவரிடம் கோரிக்கை வைத்திருப்பதாகவும் அவர் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லை வந்தே பாரத் ரயில் விருத்தாசலத்தில் நின்று செல்லும்!

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

SCROLL FOR NEXT