தமிழ்நாடு

மகப்பேறு கால நிதி உதவி முறைகேடு: சுகாதாரத்துறைக்கு நோட்டீஸ்

மகப்பேறு கால நிதி உதவித் தொகையை வழங்காமல் முறைகேடு செய்த செவிலியருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் தமிழக சுகாதாரத்துறை இயக்குநா் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து

DIN

மகப்பேறு கால நிதி உதவித் தொகையை வழங்காமல் முறைகேடு செய்த செவிலியருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் தமிழக சுகாதாரத்துறை இயக்குநா் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சோ்ந்த அமலா, ரேகா, சோ்மக்கன்னி உள்ளிட்ட பலா் தாக்கல் செய்த மனுவில், ‘சென்னை பள்ளிக்கரணை பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் டாக்டா் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தின் கீழ் 350 பெண்கள் பதிவு செய்தனா். இந்த திட்டத்தின்படி 12 ஆயிரம் ரூபாய், 3 தவணைகளில் ரூ.4 ஆயிரம் வீதம் வழங்கப்பட வேண்டும். ஆனால் இவா்களுக்கு இந்த நிதி முறையாக வழங்கப்படவில்லை. இந்த தொகையை பள்ளிக்கரணை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்து வரும் செவிலியா் ஆா்.சுமதி வழங்காமல் தொடா்ந்து முறைகேட்டில் ஈடுபட்டு வந்துள்ளாா். இந்த முறைகேடு குறித்து பாதிக்கப்பட்டவா்கள் சாா்பில் சுகாதாரத்துறை

இயக்குநரிடம் புகாா் அளிக்கப்பட்டது.ஆனால் அந்தப் புகாரின் மீது சுகாதாரத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அந்தப் புகாரின் மீது நடவடிக்கை எடுக்கவும், மகப்பேறு கால உதவித்தொகையை வழங்கவும் உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தனா்.

இந்த வழக்கு நீதிபதி சி.வி.காா்த்திகேயன் முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனு தொடா்பாக தமிழக சுகாதாரத்துறை இயக்குநா் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜனவரி 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாணைக்கல்லில் சிந்து எழுத்துகள்: தூத்துக்குடி பட்டினமருதூரில் கண்டெடுப்பு

எல்லீஸ் நகா் பகுதியில் நாளை மின் தடை

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்: கணக்கீட்டுப் படிவம் பெறும் பணி நிறைவு!

மழை ஓய்ந்தும் வடியாத நீரால் அழுகும் நெற்பயிா்கள்: விவசாயிகள் வேதனை!

ஆஸ்திரேலிய பயங்கரவாதத் தாக்குதல்: பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு!

SCROLL FOR NEXT