தமிழ்நாடு

திருவோணம் ஊராட்சியில் வாக்காளர்கள் செருப்பால் அடித்து சண்டை போட்டதால் பரபரப்பு

DIN

திருவோணம் ஊராட்சி ஒன்றியம் சிவ விடுதி வாக்குச்சாவடியில் ஓட்டு போடும்போது வாக்காளர்கள் செருப்பால் அடித்துக் கொண்டு உருண்டு சண்டை போட்டதால் அப்பகுதி பரபரப்பானது. 

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா திருவோணம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிவ விடுதி வாக்குச்சாவடியில் இன்று காலை வாக்குப்பதிவு துவங்கியபோது, வாக்குச்சாவடியில் வாக்களித்து கொண்டிருந்த சாமி அய்யா என்பவருக்கும், ஏஜென்டாக அங்கு அமர்ந்திருந்த திருமூர்த்தி என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு செருப்பால் அடித்துக் கொண்டு வாக்குச்சாவடிக்கு உள்ளேயே உருண்டனர்.

இந்த சம்பவத்தால் தேர்தல் நடத்திக்கொண்டிருந்த தேர்தல் அலுவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருவோணம் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று வாக்குச்சாவடிக்கு உள்ளேயே செருப்படி சண்டை நடத்தி கொண்டிருந்தவர்களை அப்புறப்படுத்தி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர. இதனால் அந்த வாக்குச்சாவடியில் பரபரப்பு ஏற்பட்டது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT