மன்ற நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் சந்திப்பு
கஜா புயல் பாதித்த 4 மாவட்டங்களைச் சேர்ந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை நடிகர் ரஜினிகாந்த் புதன்கிழமை நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தார்.
கஜா புயல் பாதித்த 4 மாவட்டங்களைச் சேர்ந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை நடிகர் ரஜினிகாந்த் புதன்கிழமை நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தார்.
கஜா புயல் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களுக்கும் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் பல்வேறு நிவாரணப் பணிகள் செய்துதரப்பட்டன.
தமிழகம் முழுவதிலுமிருந்து மன்ற உறுப்பினர்களிடம் நிவாரணப் பொருள்களைப் பெற்று, பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களுக்கும் இவர்கள் அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில், சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கஜா புயல் பாதித்த நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த மன்றச் செயலாளர்கள், நிர்வாகிகளை நேரில் அழைத்து ரஜினிகாந்த் சந்தித்தார். அப்போது, நிவாரண உதவிகளை சிறப்பாகச் செய்ததற்காக அவர்களுக்கு பாராட்டும், நன்றியையும் ரஜினிகாந்த் தெரிவித்ததாக மன்ற நிர்வாகிகள் தெரிவித்தனர்.