முகப்பு
தமிழ்நாடு

மதுரை அரசு மருத்துவமனை மரணங்களுக்கு அரசின் அலட்சியமே முழுக்காரணம்: ஸ்டாலின் கண்டனம் 

மதுரை அரசு மருத்துவமனையில் நிகழந்துள்ள மரணங்களுக்கு அரசின் அலட்சியமே முழுக்காரணம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:51 AM
பகிர்:

சென்னை: மதுரை அரசு மருத்துவமனையில் நிகழந்துள்ள மரணங்களுக்கு அரசின் அலட்சியமே முழுக்காரணம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

செவ்வாயன்று மின்தடையின் காரணமாக மதுரை அரசு மருத்துவமனையில் உயிர் காக்கும் எந்திரங்கள் செயல்படாமல் மூன்று நோயாளிகள் பலியாகியதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் நிகழந்துள்ள மரணங்களுக்கு அரசின் அலட்சியமே முழுக்காரணம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது

மதுரை அரசு மருத்துவமனையில் மின்தடையால் அப்பாவி உயிர்கள் பலியாகி இருப்பது கவலையளிக்கிறது.

அரசு நிர்வாகமும், சுகாதார துறையின் அலட்சியமே முழுக்காரணம். எடப்பாடி பழனிசாமி அரசு முழுப்பொறுப்பு ஏற்பதோடு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும், நிவாரணமும் தேவை!

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →