மதுரை அரசு மருத்துவமனை மரணங்களுக்கு அரசின் அலட்சியமே முழுக்காரணம்: ஸ்டாலின் கண்டனம்
மதுரை அரசு மருத்துவமனையில் நிகழந்துள்ள மரணங்களுக்கு அரசின் அலட்சியமே முழுக்காரணம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: மதுரை அரசு மருத்துவமனையில் நிகழந்துள்ள மரணங்களுக்கு அரசின் அலட்சியமே முழுக்காரணம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
செவ்வாயன்று மின்தடையின் காரணமாக மதுரை அரசு மருத்துவமனையில் உயிர் காக்கும் எந்திரங்கள் செயல்படாமல் மூன்று நோயாளிகள் பலியாகியதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் நிகழந்துள்ள மரணங்களுக்கு அரசின் அலட்சியமே முழுக்காரணம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது
மதுரை அரசு மருத்துவமனையில் மின்தடையால் அப்பாவி உயிர்கள் பலியாகி இருப்பது கவலையளிக்கிறது.
அரசு நிர்வாகமும், சுகாதார துறையின் அலட்சியமே முழுக்காரணம். எடப்பாடி பழனிசாமி அரசு முழுப்பொறுப்பு ஏற்பதோடு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும், நிவாரணமும் தேவை!
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.